சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கைது

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 120 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :2 மே 2013, 5:39 pm

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 120 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை, கல்வித்துறை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வந்த 4 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்கள், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் பங்கேற்ற மே தின ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி, துணைநிலை ஆளுநர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிடச் சென்றனர்.

மேலும் கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியபடி ஊர்வலமாக சென்ற அவர்களை, நேருவீதி - மிஷன் வீதி சந்திப்பு அருகே பெரியகடை போலீஸார் கைது செய்தனர்.

கைதான 120 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.