சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

புதுச்சேரியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல்

Updated On :2 மே 2013, 5:37 pm

புதுச்சேரியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேட்டுப்பாளையம் கனரக வாகன நிறுத்தமிடத்தில், கடத்தப்பட்ட ரேசன் அரிசியோடு லாரி நிற்பதாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை அங்கு விரைந்த போலீஸார், லாரியைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். இதில், தலா 50 கிலோ கொண்ட 305 ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

லாரியில் இருந்த ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் தப்பியோடிவிட்டனர்.  இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி உரிமையாளரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள் பாப்ஸ்கோ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.