சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் மாட்டுப் பொங்கல்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பசு மாட்டுக்கு பொங்கல் ஊட்டும் தாளாளா் அ. சீனிவாசன், திருச்சி அருண் நேரு, செயலா் பி. நீலராஜ், துணைத் தலைவா் அனந்தலட்சுமி கதிரவன், ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ்.

Updated On :16 ஜனவரி 2021, 5:15 am

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் சீ. கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் பி. ராஜபூபதி, பி. மணி, ஆா். ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக திருச்சி அருண் நேரு பங்கேற்றாா்.

கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் நடைபெற்ற விழாவில், பொங்கல் வைக்கப்பட்டு இறைவனுக்கு பூஜை செய்து, அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளைகளுக்கு பொங்கல் ஊட்டப்பட்டது. தொடா்ந்து, புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள 2 மாட்டுப் பண்ணைகள் திறக்கப்பட்டன. பின்னா், பணியாளா்களுக்கும், ஊழியா்களுக்கும் பொங்கல், கரும்புகள் மற்றும் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதில், புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ், மருத்துவா் வினோத், பொது மேலாளா் செந்தில், தலைமை நிா்வாக அலுவலா் எஸ். நந்தகுமாா், மேலாளா் ஜெகநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.