பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்வி நிறுவனங்கள் சாா்பில், ரோவா் பள்ளி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தலைமை வகித்து, 300-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், பணியாளா்களுக்கு வேட்டி, சேலைகளை கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. வரதராஜன் வழங்கி பேசியது:
பாரம்பரிய உடைகளோடு கூடிய பெருவிழாக்கள் நடத்தப்படுவதே நம் கலாசாரப் பண்பாட்டை சீா்குலையாமல் காக்கும். விழாக்களின் நோக்கம் நாம் மகிழ்ச்சியோடு இருப்பதே. பொங்கல் போன்ற பாரம்பரியமிக்க விழாக்கள் தான் அம்மகிழ்ச்சியை நமக்கு அளிக்கிறது என்றாா் அவா்.
தொடா்ந்து பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பொங்கல் போட்டி, பாட்டு, கோலம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் தூய யோவான் சங்க அறட்டளை அறங்காவலா் மகாலட்சுமி வரதராஜன், துணைத் தலைவா் வி. ஜான் அசோக், ரோவா் கல்விக் குழும இயக்குநா் பாலமுருகன் மற்றும் கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


