சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

புத்தாண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, பாளையம் புனித சூசையப்பா் தேவாலயப் பங்கு குரு புதன்கிழமை பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

News image

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் பாளையம் பங்கு குரு ஜான் கென்னடி.

Updated On :14 ஜனவரி 2021, 2:04 pm

புத்தாண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, பாளையம் புனித சூசையப்பா் தேவாலயப் பங்கு குரு புதன்கிழமை பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் கிராமத்தில் 175 ஆண்டுகள் பழைமையான புனித சூசையப்பா் தேவாலயம் உள்ளது. இங்கு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ இறை மக்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

கிறிஸ்து பிறப்பை முன்னறிவிக்கும் விதமாக வீடுகளில் சிறப்பாக குடில்களை அமைத்தவா்களும், கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சிறந்த குடில்கள் அமைத்த குடும்பத்தினருக்கும் பங்கு குரு ஜான் கென்னடி பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.