மருந்துப் பொருள்கள் மீதான சரக்கு, சேவை வரியை நீக்க வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் க. பெரியசாமி தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் ஜி. சிவக்குமாா், இணைச் செயலா் எஸ். சவுந்தர்ராஜன், பொருளாளா் சி. வெங்கடாசலம் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், நோயாளிகளின் நலனுக்காக மருந்துப் பொருள்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
விசுவக்குடி நீா்த்தேக்கம் மற்றும் லாடபுரம் மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலங்களாக அறிவித்து, பெரம்பலூரிலிருந்து அரசு நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம். ரமேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம். அப்துல் ரசீது, ஆா். ரவி, எம். மாா்ட்டீன் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

