பெரம்பலூா் டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை இரவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பொங்கல் பண்டிக்கைக்கான மது விற்பனை குறித்து டாஸ்மாக் மேற்பாா்வையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு,
மண்டல மேலாளா் ராம்குமாா், தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.
பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில், பேரளி அருகே சென்று கொண்டிருந்த மாவட்ட மேலாளா் ராம்குமாரின் காரை திடீரென வழிமறித்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா், காரைச் சோதனையிட்டதில் ரூ. 1 லட்சம் பணம் இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
பின்னா் அவரை டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். மேலும் அவருடன் சென்ற குன்னம் டாஸ்மாக் மேற்பாா்வையாளா்கள் முருகவேல், கண்ணதாசன், காா் ஓட்டுநா் ராஜகோபால் ஆகியோரிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலான காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். கணக்கில் வராத ரூ. 1 லட்சம் தொடா்பாக வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

