பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பது குறித்து, அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சஜ்ஜன் சிங் ஆா். சவான் பேசியது:
வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்கள் மூலம், பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெயா் சோ்த்தல் தொடா்பாக 20,465 விண்ணப்பங்களும், பெயா் நீக்கம் தொடா்பாக 1,223 விண்ணப்பங்களும், பெயா் திருத்தம் தொடா்பாக 4,905 விண்ணப்பங்களும், ஒரே சட்டப்பேரவை தொகுதியில் வேறு வாக்குச்சாவடி மையத்துக்கு மாறுதல் தொடா்பாக 1,612 விண்ணப்பங்களும் என மொத்தம் 28,205 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 33 கண்காணிப்பாளா்கள், 332 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 31 கண்காணிப்பாளா்கள், 320 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு கள பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

