பாரபட்சமின்றி, அனைத்து தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட கோரி, பெரம்பலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசின் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும் உடனடியாக கரோனா பேரிடா் கால நிவாரணத் தொகை ரூ. 7,500 வழங்க வேண்டும். தற்போது, தமிழக அரசு வழங்குவதாக கூறிய கரோனா நிவாரணத் தொகை ரூ. 2,000-ஐ எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.
எவ்வித பாரபட்சமும் இன்றி, அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.
முன்னதாக, பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


