பெரம்பலூா் கவண் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சாா்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை இலக்கியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்தில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமையில் நடைபெற்ற பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில், பேராசிரியா்கள் அ. தமிழ்க்குமரன், செ. விநோதினி, கவிஞா் இ. தாஹீா் பாட்ஷா, கல்வியாளா்கள் ஜெ. கயல்விழி, பி. பாரதி, பா. பாரதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

