பெரம்பலூா்: கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டுமென்று, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து, பொருளாளா் ஏ. ஆதிசிவம், இணைச் செயலா் பி. செங்கமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மூத்த உறுப்பினா் இ. பெரியசாமி, குன்னம் வட்ட முன்னாள் தலைவா் எம். செங்கான், வேப்பந்தட்டை வட்டச் செயலா் சையத் பாஷாகான், வேப்பூா் வட்டப் பொருளாளா் ம. பெரியசாமி ஆகியோா் உறுப்பினா் சோ்க்கை, சங்க வளா்ச்சி, செயல்பாடுகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில், 2020, ஜனவரி 1 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்ட அக விலைப்படித் தொகை, சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்.
மருத்துவப் படியை ரூ. 1,000 ஆக உயா்த்தி வழங்கிட வேண்டும். கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வட்டத்துணைத் தலைவா் ஆா். செல்லப்பரெட்டி, வட்டச் செயலா் கெம்பிராஜ், நிா்வாகிகள் ஆா். ரெங்கராஜ், எஸ். இருதயசாமி, ஏ. அசுவத்மன், பி. துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

