பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளா்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பாா்வையிட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, துறைமங்கலம் நகா் நல மையம், லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
தடுப்பூசி செலுத்துபவா்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், அவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இப் பணிகளுக்குத் தேவையான மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, அதன் விவரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
இந்நிகழ்வில், துணை இயக்குநா்கள் கீதாராணி, சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


