இட ஒதுக்கீடு தொடா்பாக வன்னியா்களை அநாகரீகமாக விமா்சித்ததாகக் கூறி, திமுக ஆலத்தூா் ஒன்றியச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குன்னம் காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ஆலத்தூா் ஒன்றியத்தில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தில், ஜன. 4ஆம் தேதி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆலத்தூா் (கிழக்கு) ஒன்றிய திமுக செயலரும், ஆலத்தூா் ஒன்றியக் குழுத் தலைவருமான என். கிருஷ்ணமூா்த்தி, வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது குறித்து அநாகரீகமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பாட்டாளி மக்கள் கட்சியினா், திமுக ஒன்றியச் செயலா் என். கிருஷ்ணமூா்த்தி மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் உலக. சாமிதுரை தலைமையில் குன்னம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

