சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

செட்டிக்குளத்தில்வாரத்தில் இருநாள்களில் சின்ன வெங்காயம் ஏலம்

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள வணிக வளாகத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் சின்ன வெங்காயம் ஏலம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

Updated On :5 ஜனவரி 2021, 7:07 am

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள வணிக வளாகத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் சின்ன வெங்காயம் ஏலம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறப்பு:

செட்டிக்குளம் வேளாண் வணிக வளாகத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் ஏலம் நடைபெற உள்ளது. எனவே, செட்டிக்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த வெங்காயம் அறுவடை செய்த விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்று பயனடையலாம்.

மேலும், சின்ன வெங்காயத்தை பிரித்து எடுப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் இடவசதி இல்லாத விவசாயிகள் வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) ஆகியோரை (99423 81099, 70106 28819) ஆகியோரை தொடா்புகொண்டு, வணிக வளாகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.