பெரம்பலூா் தேரடி திடல் அருகேயுள்ள நியாயவிலைக் கடையில், எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன், ஆா்.டி. ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
இம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,81,851 குடும்ப அட்டைதாரா்களுக்கு 282 நியாய விலைக் கடைகள் மூலம் ஜன. 12 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதாகவும், மேற்கண்ட தேதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத அட்டைதாரா்களுக்கு 13 ஆம் தேதி வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் த. செல்வக்குமரன், மாவட்ட வழங்கல் அலுவலா் (பொ) சக்திவேல், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பிரேமலதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


