விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருமாந்துறை சுங்கச் சாவடியை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவதென எஸ்டிபிஐ கட்சி முடிவு செய்துள்ளது.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.
மாநிலச் செயலா் அபுபக்கா் சித்திக் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கியும் பேசினாா்.
கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் முஹம்மது பாருக், மாவட்டச் செயலா்கள் ஷாஜஹான், முஹம்மது பிலால், பொருளாளா் ஜியாவுதீன் அஹமது, செயற்குழு உறுப்பினா்கள் முஹைதீன் பாருக், அகமது இக்பால், அஸ்கா் அலி, சையது அபுதாஹிா், முஹம்மது இப்ராஹிம் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

