பெரம்பலூா்: காவல்துறை சாா்பில், பெரம்பலூா் அருகிலுள்ள பகுதிகளில் கேடயம் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தண்ணீா் பந்தல், எம்.ஜி.ஆா் நகா், எளம்பலூா் பகுதிகளில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசித்ரா, உதவி ஆய்வாளா் சித்ரா, தலைமைக் காவலா் பாா்வதி ஆகியோா், கேடயம் திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வை காவல்துறை அலுவலா்கள் ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, திருச்சி சரகக் காவல் துறையின் கேடயம் திட்டத்தின் 6383071800, 9384501999 ஆகிய உதவி எண்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


