பணி நீக்க காலத்தை, பணி காலமாக அறிவிக்க சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில், தமிழ்நாடு நெடுஞ்சலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் வட்டப் பேரவைக் கூட்டம், சங்க பொறுப்பாளர் கே.மணிவேல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், மாநிலச் செயலர் வி.ஆர். செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவித்து, பணி நீக்க காலத்தில் உயிரிழந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தலைவராக பி. குங்குமத்துரை, துணைத் தலைவராக என். ராமசாமி, செயலராக ஆர். விஜயக்குமார், இணைச் செயலராக பி. மாரிமுத்து, பொருளாளராக ஆர். முத்துசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் சி. மகாதேவன், மாவட்டச் செயலர் சி. சுப்ரமணியன், வேப்பந்தட்டை வட்ட இணைச் செயலர் பி. சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் ஏ.செல்வக்குமார் நன்றி கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

