சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இன்று உணவுப் பொருள் குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

Updated On :12 ஜூலை 2013, 7:26 am

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வி. மீனாட்சிசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பான பொதுமக்களின் குறைகேட்கும் கூட்டம் நடைபெறுகிறது.  பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறையில் டிஎன்சிஎஸ்சி துணை மண்டல மேலாளர் தலைமையிலும், குன்னம் வட்டம் சித்தளியில் பொது விநியோகத்திட்ட துணைப் பதிவாளர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளத்தில் நில அளவை உதவி இயக்குநர் தலைமையிலும் காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.