சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெரம்பலூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துதுறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி

Updated On :2 மே 2013, 7:08 pm

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துதுறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் கே.பனீந்திரரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

செஞ்சேரியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணி, குரும்பலூரில் 100 சதவித மானியத்தில் சொட்டு நீர் மூலம் மேற்கொள்ளப்படும் வாழை சாகுபடி, பெரம்பலூர் உப்போடையில் புதிதாக அமைக்கப்பட்ட கிணறு, வாலிகண்டபுரத்தில் தனிநபர் கழிப்பறைகள், முழுசுகாதார திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தில் கழிப்பறைகள் மற்றும் ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டும் பணிகளை பார்வையிட்டு கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க வாலிகண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டார். கீழப்புலியூர் ஊரட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடுகளை பார்வையிட்டு, பயனாளிகளின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கீழப்புலியூர் ஊராட்சியில் கோழிப் பண்ணைகளை பார்வையிட்டு பயனாளிகளிடம் கோழிகள் வளர்ப்பு முறைகள், நோய் தடுப்பு குறித்து கேட்டறிந்தார் பனீந்திரரெட்டி.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, திட்ட இயக்குநர் க. சரஸ்வதி, வேளாண்துறை இணை இயக்குநர் ப. சங்கரலிங்கம், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் என். சந்திரசேகரன், நகராட்சி ஆணையர் போ. குருசாமி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) தங்கராசு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.