சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இரு வேறு விபத்துகளில் இருவர் சாவு

பெரம்பலூர் அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Updated On :2 மே 2013, 7:07 pm

பெரம்பலூர் அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வேலாயுதம் (59). இவர், நாரணமங்கலத்திலிருந்து ஆலத்தூர் கேட்டுக்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து சென்ற வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து பாடாலூர் போலீஸôர் வழக்குப் பதிந்து, ஆத்தூரை சேர்ந்த வேன் ஓட்டுநர் சக்திவேலை (23) கைது செய்து விசாரிக்கின்றனர்.

பேருந்து மோதி முதியவர் சாவு:

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் சுப்ரமணியன் (60). இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.