அகம் பொதிந்தவர்கள் - கர்ணன்; பக்.160; ரூ.75; மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம்-608 001.
மகாகவி பாரதியார் தொடங்கி எழுத்தாளர் மாஜினி வரை தன் மனம் கவர்ந்த, தான் நேரில் பார்த்துப் பழகிய, பழகத் தவறிய 26 எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள், அவர்களைப் பற்றிய தனது கருத்துகள் போன்றவற்றை சுவையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
எழுத்தாளர்கள் எழுதிய நூல்களின் பட்டியல், அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு போன்ற தெரிந்த தகவல்களையே சொல்லி நம்மைச் சலிப்படைய வைக்காமல், அவர்களை தான் சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள், சந்திக்காத சிலருடை படைப்புகள் தன்னை பாதித்த விதம் போன்றவற்றை மிகையான வர்ணனையின்றி இயல்பாகச் சொல்லியிருக்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் மரபில் வந்த ஜெகவீரபாண்டியனார் சிறந்த கவிஞராக விளங்கியது, "இதயநாதம்' சிதம்பர சுப்பிரமணியம் வாகினி ஸ்டுடியோவில் மேலாளராகப் பணிபுரிந்தது, வைகையாற்று மணலில் காலில் செருப்பில்லாமல் நூலாசிரியர் தவித்தபோது எழுத்தாளர் நா.பா., தன் தோளிலிருந்த துண்டை மணலில் போட்டு அதில் நிற்கச் சொன்னது, எழுத்தாளர் மாஜினி தேசிய இயக்க ஊர்வலத்தில் கலந்து கொண்டு "308 போலீஸ் அடக்குமுறை ஒழிக' என்று அவருடைய தந்தையான போலீஸ்காரரின் 308 எண்ணைக் குறிப்பிட்டு கோஷமிட்டது போன்ற பல தகவல்கள் வியப்பூட்டுபவை.
பாரதி, பாரதிதாசன் போன்று அதிகம் அறியப்பட்டவர்களைப் பற்றி கூட பல அறியப்படாத தகவல்களும் "சரஸ்வதி' விஜயபாஸ்கரன், "உதயம்' கன்னிக்கண்ணன் போன்ற அதிகம் அறியப்படாதவர்களைப் பற்றி வியப்பளிக்கும் தகவல்களும் இந்நூலில் உள்ளன. கடந்த கால எழுத்தாளர்களைப் பற்றி அறிய உதவும் அரிய நூல்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

