சாண்டில்யன் எழுதுகிறேன் - தெ.இலக்குவன்; பக்.248; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை- 17; )044-2431 0769.
சரித்திர நாவலாசிரியராகப் புகழ் பெற்ற சாண்டில்யனின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதப்பட்டிருக்கும் நூல் இது.
சாண்டில்யனின் 35 சரித்திர நாவல்களில் முப்பத்து நான்கும், சரித்திர சிறுகதைத் தொகுப்பு இரண்டும், சமூக நாவல்கள் நான்கும் இதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு குறை, ஆய்வின் பெரும் பகுதி கதையை விவரிப்பதிலேயே போய்விடுகிறது. குறிப்பாக "பாண்டியன் பவனி' என்ற நாவலைப் பற்றிய அத்தியாயம் முழுவதும் கதையை விவரித்துவிட்டு கடைசியாக ஒரே ஒரு வரியில் வேறு எழுதுவதற்கு எதுவுமில்லாத நாவல் என்ற குறிப்படுகிறார் நூலாசிரியர்.
சாண்டில்யன் தன்னுடைய நாவல்களின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனியாக பொருத்தமான தலைப்புகளை வைத்திருப்பதைப் பாராட்டும் நூலாசிரியர், நாவலின் நீளத்துக்காகத் தேவையில்லாமல் பல அத்தியாயங்கள் வருவதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. உதாரணமாக "கடல் புறா' நாவலில் ஓர் இடத்தில் குணவர்மன் தன் கதையைக் கூறுவதாக ஆரம்பிக்கிறான். ஆனால் நான்கு பக்கங்கள் கழித்துதான் கதை ஆரம்பிக்கிறது.
தேவையில்லாமல் பல அத்தியாயங்கள், சலிப்பூட்டக்கூடிய நீண்ட வர்ணனைகள், எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுவது போன்றவற்றால் கதை பல இடங்களில் நீர்த்துப் போய்விடுகிறது என்பதையும் தன்னுடைய ஆய்வுகளின் இறுதியில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
சாண்டில்யனின் அத்தனை படைப்புகளையும் ஒரே சமயத்தில் படித்து முடித்த திருப்தியைத் தரும் நூல் இது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

