உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள் - தொகுப்பாசிரியர்: கோபிநாத் மொகந்தி- தமிழில்: ஆனைவாரி ஆனந்தன்; பக்.208; ரூ.125; சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் வாழும் பழங்குடிகளின் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன.
உதாரணமாக, எறும்பு என்ற சிறுகதையில் ஓர் அதிகாரி அரிசி கடத்தலை முற்றிலுமாகத் தடுக்கும் பொருட்டு மலைக் கிராமத்தில் பல நாட்கள் நடந்து அங்குள்ள சந்தைக்கு வருகிறான். அரிசி கடத்தலைத் தடுக்கும் இந்த நடவடிக்கை தனது எதிர்காலத்திற்கும் புரமோஷனுக்கும் பயன்படும் என்று மிகுந்த முனைப்புடன் செயல்படத் துடிக்கிறான். ஆனால் அவன் செல்லும் வழி நெடுக மலைசாதி மக்களின் வாழ்க்கையைப் பார்க்கிறான். அவர்களுடைய பசியால் பஞ்சடைந்த அந்தக் கண்களை கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகிறான். ஓர் அதிகாரியின் மன நிலையிலிருந்து மாறி ஒரு நல்ல மனிதனாகத் தன் வழியில் நடக்கத் துவங்குகின்றான். இப்படி ஒவ்வொரு கதையும் தனி முத்திரை பதிக்கிறது.
நாம் அதிகம் அறிந்திராத ஒடிசா கிராமங்களின் ஊடே கதை நகர்ந்து செல்வது, ஒடிசா மீதான புதிய புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

