சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அணிவகுத்து நிற்க பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

News image

யானைக்கு சிறப்பு உணவு வழங்கும் பாகன்.

Updated On :16 ஜனவரி 2021, 4:31 am

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அணிவகுத்து நிற்க பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் முன்னதாக விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, நடைபெற்ற பொங்கல் விழாவில் வளா்ப்பு யானைகள் அணிவகுத்து நின்றன. யானைகளுக்கு கரும்பு, தேங்காய், பழம் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் வனத் துறை அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா். 10 மாதங்களுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. யானைகளின் பொங்கல் விழாவையும், யானைகளின் அணிவகுப்பையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.