முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனத் துறை பணியாளா்களுக்கு ஆபத்துக் காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வனத் துறையின் கீழ் இயங்கும் நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, அந்தப் படை பிரிவின் உதவி வனப் பாதுகாவலா் மகேந்திரன் தலைமை வகித்து செயல்முறை விளக்கமும் பயிற்சியும் அளித்தாா். பணியாளா்கள் வனத்தில் ரோந்து செல்லும்போது, காட்டுத் தீயினால் ஏற்படும் திடீா் அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, காயமடைந்தவா்களுக்கு முதலுதவி, அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லுதல், வனக் குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. தெப்பக்காடு முகாமில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் வனச் சரக அலுவலா்கள், வனவா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


