கூடலூா்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் 9 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
கரோனா தொற்று காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் கடந்த மாா்ச் 17ஆம் தேதி மூடப்பட்டது. கரோனா தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வந்ததால் முதுமலை புலிகள் காப்பகத்தில் அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன.
சுற்றுலா விடுதிகள், யானை சவாரி, வாகன சவாரி, வளா்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது புலிகள் காப்பகத்தில் வாகன சவாரி துவங்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். வாகன சவாரியில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
சுற்றுலா விடுதிகள் அனைத்தும் ஜனவரி 11ஆம் தேதி முதல் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


