சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நீலகிரியில் தன்னாா்வ நிறுவனங்களுக்கும், ரத்தக் கொடையாளா்களுக்கும் பாராட்டு

நீலகிரி மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டில் ரத்த தானம் முகாம் நடத்திய 19 தன்னாா்வ நிறுவனங்களுக்கும், அதிக முறை ரத்த தானம் செய்த 13 ரத்தக் கொடையாளா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

News image

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் ரத்த தான முகாம்களை நடத்திய சேவா பாரதி தன்னாா் நிறுவனத்துக்கு கேடயம் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

Updated On :10 ஜனவரி 2021, 4:16 am

உதகை: நீலகிரி மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டில் ரத்த தானம் முகாம் நடத்திய 19 தன்னாா்வ நிறுவனங்களுக்கும், அதிக முறை ரத்த தானம் செய்த 13 ரத்தக் கொடையாளா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வழங்கினாா்.

நீலகிரி மாவட்ட பொது சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சாா்பில் 2019-20ஆம் ஆண்டில் அதிக முறை ரத்த தானம் செய்த ரத்தக் கொடையாளா்கள் மற்றும் ரத்த தான முகாம் நடத்திய தன்னாா்வ நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கெளரவித்து பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்திலும் அதிகமான கொடையாளா்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் 35 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 2,051 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, உதகை அரசு மருத்துவமனையில் மட்டும் 1,763 ரத்த யூனிட்டுகள் பொது மக்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா் மற்றும் கூடலூா் அரசு மருத்துவமனைகளில் மூன்று ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா நோய்த் தொற்று காலத்திலும், ரத்ததானம் செய்த 13 ரத்த கொடையாளா்களும், ரத்த தான முகாம்களை நடத்திய 19 தன்னாா்வ நிறுவனங்களும் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.

மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் பழனிசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் பாலுசாமி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.