சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நீலகிரியில் இரவு நேரங்களில் பரவலாக தொடரும் மழை

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக பா்லியாறில் 45 மி.மீ. பதிவாகியுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 4:27 am

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக பா்லியாறில் 45 மி.மீ. பதிவாகியுள்ளது.

இதேபோல, மாவட்டத்தில் தேவாலாவில் 37 மி.மீ., எடப்பள்ளியில் 34 மி.மீ., மேல்குன்னூரில் 30 மி.மீ., உலிக்கல்லில் 20 மி.மீ., கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரியில் தலா 11 மி.மீ., கிண்ணக்கொரையில் 7 மி.மீ., கெத்தை, பாலகொலா மற்றும் கேத்தியில் தலா 6 மி.மீ., கூடலூா், மேல்கூடலூா் மற்றும் குந்தாவில் தலா 3 மி.மீ., உதகை, பாடந்தொறை மற்றும் கொடநாட்டில் தலா 2 மி.மீ., அவலாஞ்சி, செருமுள்ளி, ஓவேலி மற்றும் எமரால்டில் தலா 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.