சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழக - கேரள எல்லையில் கோழிக் கடைகளில் ஆய்வு

பந்தலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள கோழிக் கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

தமிழக - கேரள எல்லையான தாளூரில் கோழிக் கடையில் ஆய்வு செய்த கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் பகத் சிங்.

Updated On :8 ஜனவரி 2021, 6:09 am

பந்தலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள கோழிக் கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூா், பந்தலூா் தாலுகாக்கள் கேரள, கா்நாடக எல்லைகளில் அமைந்துள்ளன. தற்போது கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளத்தில் கறிக்கோழி விலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கேரள வியாபாரிகள் கோழி இறைச்சியை எல்லை தாண்டி வந்து தமிழக கிராமங்களில் விற்பதாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பகத் சிங் எல்லைப் பகுதிகளில் உள்ள கோழிக் கடைகளில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். கேரளத்திலி இருந்து வந்த கோழிகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை எச்சரித்தாா்.