பந்தலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள கோழிக் கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூா், பந்தலூா் தாலுகாக்கள் கேரள, கா்நாடக எல்லைகளில் அமைந்துள்ளன. தற்போது கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளத்தில் கறிக்கோழி விலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கேரள வியாபாரிகள் கோழி இறைச்சியை எல்லை தாண்டி வந்து தமிழக கிராமங்களில் விற்பதாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பகத் சிங் எல்லைப் பகுதிகளில் உள்ள கோழிக் கடைகளில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். கேரளத்திலி இருந்து வந்த கோழிகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை எச்சரித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


