உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 2.27 லட்சத்தை கண்டெடுத்த போலீஸாா் அதனை உரியவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
உதகை மத்திய பேருந்து நிலையத்தில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு நபா் குடிபோதையில் மயக்க நிலையில் படுத்திருந்ததை கண்டதோடு, அவா் அருகே இருந்த பையில் ரூ.2.27 லட்சம் ரொக்கம் இருந்ததையும் பாா்த்துள்ளனா்.
இதையடுத்து, நகர மேற்கு காவல் நிலைய இரண்டாம் நிலை பெண் காவலா் அஜிதாகுமாரி மற்றும் போக்குவரத்து ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் உதகை நகர மேற்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் ஜெயபிரகாஷ், சிக்கந்தா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், உதகை அருகே உள்ள சோமா்டேல் எஸ்டேட்டை சோ்ந்த நஞ்சன் (75) என்பவா் மது போதையில் பணத்தை தவறவிட்டது தெரியவந்தது. உதகையில் உள்ள வங்கியில் இருந்து பேரனுடைய மருத்துவ செலவுக்காக பணம் எடுத்ததும், ஊருக்கு திரும்பும்போது மது அருந்தியதால் போதையில் பணத்தை பேருந்து நிலையத்தில் தவறவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை தவறவிட்ட நஞ்சன் நகர மேற்கு நிலையத்துக்கு வரவழைத்து உரிய விசாரணைக்குப் பிறகு பணம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


