நீலகிரி மாவட்டம் மஞ்சூா், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் தேயிலைச் செடிகளில் சிலந்திப் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மஞ்சூா், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிகளில் கடந்த சில நாள்களாக பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் தேயிலைச் செடிகளின் மீது போதிய வெளிச்சம் படாததால் சிலந்திப் பூச்சிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனால் தேயிலை விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் தேயிலைத் தோட்ட உரிமையாளா்கள் கவலை அடைந்துள்ளனா். பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், இலைகளுக்கு பூஞ்சான நோய்கள் பரவி தேயிலை வரத்து குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

