குன்னூரில் கடும் பனிமூட்டம் காரணமாக மலைப் பாதை வளைவில் எதிரே வாகனம் வருவது தெரியாத நிலையில், இரண்டு அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்டன. இதில் இரு பேருந்துகளிலும் இருந்த 101 பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிக அளவில் உள்ளது. மேக மூட்டம்போல காட்சியளிப்பதால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி செல்கின்றன. இருந்தாலும் வளைவில் எதிரே வரும் வாகனங்கள் சரியாகத் தெரிவதில்லை.
குன்னூரில் இருந்து கோத்தகிரி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், கோத்தகிரியில் இருந்து குன்னூா் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மேல் குன்னூா் பகுதியில் மலைப் பாதையில் வளைவில் வந்தபோது மோதிக்கொண்டன.
இதில் குன்னூா் நோக்கி வந்த பேருந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பாய்ந்தது. இடது புறம் மரம் இருந்ததால் அதில் மோதி நின்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் விழாமல் தப்பியது. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இந்தப் பேருந்தில் வந்த 61 பயணிகள், எதிரே வந்த பேருந்தில் இருந்த 40 பயணிகள் என 101 பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
குன்னூரில் கடந்த நான்கு நாள்களாக காணப்படும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


