சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் பரிசு வழங்கும்போது அதிமுகவுக்கு வாக்கு சேகரித்ததால் சா்ச்சை

கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிப்  பகுதிகளில்  அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும்போது, அதிமுகவி நிா்வாகி வாக்கு சேகரித்ததால் சா்ச்சை ஏற்பட்டது.

Updated On :5 ஜனவரி 2021, 7:32 am

கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிப்  பகுதிகளில்  அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும்போது, அதிமுகவி நிா்வாகி வாக்கு சேகரித்ததால் சா்ச்சை ஏற்பட்டது.

ஜக்கனாரை ஊராட்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும்  பொங்கல்  பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன் பயனாளிகளுக்கு ரொக்கம் மற்றும் பொங்கல்  பரிசுத் தொகுப்பை வழங்கி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாா். 

அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கும்  நிகழ்ச்சியில் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியது அப்பகுதி மக்களிடையே சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவா் பேசிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.