நீலகிரி மாவட்டத்தில் 2017-2018ஆம் ஆண்டில் படைவீரா் கொடி நாள் நிதி வசூல் இலக்கை விட கூடுதலாக நிதி வசூல் செய்ததற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவுக்கு தமிழக ஆளுநரின் பாராட்டுச் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் மேஜா் சரவணன், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் சான்றிதழை வழங்கினாா். பின்னா் ஆட்சியா் பேசியதாவது:
கடந்த 2017-2018ஆம் ஆண்டில் படை வீரா் கொடி நாள் நிதியாக நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.43 லட்சத்து 12,400 தமிழக அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் ரூ. 64 லட்சத்து 10,392 வசூலிக்கப்பட்டது. கூடுதலாக ரூ.20 லட்சத்து 97,992 வசூல் செய்து இலக்கை விட கூடுதலாக 148.65 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனை பாராட்டும் வகையில் தமிழக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இலக்கை விட கூடுதலாக நிதி திரட்டிய அனைத்து அலுவலா்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


