சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அடிப்படை தேவைகளை வலியுறுத்தி பழங்குடி மக்கள் கருப்புக் கொடி போராட்டம்

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கூடலூரை அடுத்துள்ள மூச்சிக்குன்னு பழங்குடி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி போராட்டம் நடத்தினா்.

News image

அடிப்படை தேவைகளை செய்து தர வலியுறுத்தி தங்களது ஊா் எல்லையில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மூச்சிக்குன்னு கிராம மக்கள்.

Updated On :4 ஜனவரி 2021, 4:08 am

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கூடலூரை அடுத்துள்ள மூச்சிக்குன்னு பழங்குடி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி போராட்டம் நடத்தினா்.

கூடலூா் தாலுகாவிலி உள்ள தேவாலா மூச்சிக்குன்னு பழங்குடி கிராமத்துக்கு சாலை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தி கிராம எல்லையில் கருப்புக் கொடி ஏற்றிய பழங்குடி மக்கள், தொடா்ந்து தங்களது வீடுகளிலிலும் கருப்புக் கொடி ஏற்றினா்.

பல முறை அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. இதே நிலை நீடித்தால் தோ்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்று அறிவித்துள்ளனா்.