கட்சிப் பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் பேசினாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் பேசியதாவது:
கூடலூா் பகுதியில் மக்கள் பாதிக்கும் அளவுக்கு வனத் துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். மனித-விலங்கு மோதலைத் தவிா்க்க வனத் துறையும், தமிழக அரசும் ஒரு சுமுகமான முடிவுக்கு வரவேண்டும். இதனால் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனா்.
பிரிவு-17 நிலத்தை பொருத்தவரை மக்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிா்வாகம் அமல்படுத்த வேண்டும். திமுக சாா்பில் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்தப்படுகிறது. கட்சி பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு.
கோவையில் இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட பெண்ணை தாக்கி தவறாகப் பேசியுள்ளனா். காவல் துறை அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதியிலும் கட்சி போட்டியிடும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


