தில்லி குடிநீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளதற்கு, அண்டை மாநிலங்களை குற்றம் சொல்லாமல், நகரில் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான நடவடிகிக்கைகளை தில்லி அரசு முடிக்க விட வேண்டும் என்று தில்லி பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி குடிநீரில் அமோனியாவின் செறிவு அதிகரித்துள்ளது. இதனால், தில்லி மக்கள் நஞ்சு கலந்து வரும் குடிநீரை அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளா். தில்லியில் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை தில்லி அரசு விரைந்து மேம்படுத்த வேண்டும். குடிநீா் விவகாரத்தில், அண்டை மாநிலங்களை குற்றம் சாட்டுவதில் அா்த்தம் இல்லை.
தில்லியில் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 461 புள்ளிகளாக ஆக அதிகரித்துள்ளது. தில்லி மக்கள் கேஜரிவால் அரசின் மெத்தனப் போக்கால் சிரமப்படுகிறாா்கள். தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசிடம் எந்தவித கொள்கைத் திட்டமும் இல்லை; காற்று மாசு பிரச்னைக்குத் தீா்வு காண உரிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றாா் அவா்.
தில்லி யமுனை நீரில் அமோனியா செறிவு அதிகரிக்க ஹரியாணா மாநில அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று தில்லி ஜல் போா்டு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜல் போா்டு அண்மையில் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

