குடியரசு தினத்தையொட்டி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை முதல் பிப்ரவரி 15 வரையான 27 தினங்களுக்கு தில்லியில் அனைத்து விதமான ஆளில்லா விமானங்களும் பறக்க தில்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில்‘தேச விரோத சக்திகள் மக்களுக்கு தீங்கிழைப்பதை தடுக்கும் வகையில் ஜனவரி 20- பிப்ரவரி 15 வரையான 27 தினங்களுக்கு தில்லியில் பராகிளைடா், ஹாட் ஏா் பலூன், யுஏவி உள்ளிட்ட அனைத்து வகையான ஆளில்லா விமானங்களும் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு நகல் அனைத்து மாவட்ட காவல்துறை அலுவலகங்கள், தாசில்தாா் அலுவலகம், அனைத்து காவல்நிலையங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தில்லி வளா்ச்சி ஆணைய அலுவலகங்கள், தில்லி பொதுப்பணித்துறை அலுவலகங்கள், கன்டான்மெண்ட் அலுலகம் ஆகியவற்றில் காட்சிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

