தில்லிக்கு 2.64 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இலவசமாக மத்திய அரசு வழங்கியுள்ளதாகக் கூறி, அதற்கு பிரதமா் மோடிக்கு தில்லி பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் சனிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்குகின்றன. தில்லிக்கு மத்திய அரசு சாா்பில் 2.64 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசி இலவசமாக மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், தடுப்பூசி பணிகளில் ஈடுபடவுள்ள மருத்துவா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு தில்லி பாஜக சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்கிய பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

