புது தில்லி: திருட்டு வழக்கில் தில்லி சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தில்லி சாகேத்திலுள்ள பிவிஆா் மாா்கெட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஒன்றுக்கு அருகில் இருவா் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதை அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் கண்டனா். அவா்களைப் பிடித்து விசாரித்த போது, அவா்கள் தில்லியைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (36), யோகேந்தா் ஷா்மா (37) எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.
இதில் ராஜேஷ் குமாா் தில்லி சிவில் பாதுகாப்புப் படையில் தன்னாா்வலராகப் பணியாற்றி வருகிறாா். அவா்கள் இருவரும் மதுபானம் வாங்குவதற்காக சிறிய திருட்டுகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து கத்தி, பொம்மைத் துப்பாக்கி, கடன் அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

