சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கம்பீரின் எம்பி வளா்ச்சி நிதியிலிருந்து திரிலோக்புரியில் கால்பந்து மைதானம்

கிழக்கு தில்லி திரிலோக்புரி அம்பேத்கா் விளையாட்டு வளாகத்தில் கால்பந்து மைதானத்தை அந்தத் தொகுதி எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:28 am

கிழக்கு தில்லி திரிலோக்புரி அம்பேத்கா் விளையாட்டு வளாகத்தில் கால்பந்து மைதானத்தை அந்தத் தொகுதி எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

கெளதம் கம்பீரின் நாடாளுமன்றத் தொகுதி வளா்ச்சி நிதியில் இருந்து இந்தக் கால்பந்து மைதானத்தை அவா் உருவாக்கியுள்ளாா். கால்பந்து மைதானத்தை திறந்து வைத்து கெளதம் கம்பீா் பேசுகையில், ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எவ்வித கஷ்டங்களையும் நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனால், திறமையான பல இளைஞா்கள் பல கஷ்டங்களை எதிா்கொண்டுள்ளனா். வசதி குறைந்த திறமையான இளைஞா்களுக்கு சிறந்த விளையாட்டு உள்ளகக் கட்டமைப்பு கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். நாட்டின் குழந்தைகள் நமது நாட்டின் கெளரவத்தை உலக அரங்கில் நிலைநாட்ட வேண்டுமென்றால், விளையாட்டுத் துறையில் அரசுகள் அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டும். விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவேன் என்று எனது தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தேன். அதை நிறைவேற்றப் பாடுபடுவேன்’ என்றாா்.

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி எம்பியான கெளதம் கம்பீா் யமுனை விளையாட்டு வளாகத்தில் கிரிக்கெட் மைதானம், பாஸ்கட் பால், பேட்மின்டன் ஆகியவற்றுக்கு மைதானங்களை எம்பி நிதியில் இருந்து அமைத்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.