தில்லியை அடுத்துள்ள பகுதியான கிரேட்டா் நொய்டாவில் வியாபாரியிடம் ரூ.13.20 லட்சம் கொள்ளையடித்த இருவரை போலீஸாா் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக தாத்ரி காவல் சரக போலீஸ் துணை ஆணையா் ராஜேஷ்குமாா் சிங் கூறியதாவது:
தாத்ரி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் குற்றவாளி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மற்றொரு நபா் தப்பிச் சென்றாா். ஆனால், போலீஸாா் நடத்திய தேடுதல் வேட்டையில் பிடிபட்டாா்.
கைது செய்யப்பட்ட இருவரில் பங்கஜ் என்கிற பாஷா, காஜியாபாதைச் சோ்ந்தவா் என்பதும் விமல் ஜாதவ் என்பவா் மீரட் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்துள்ளது. அவா்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13.20 லட்சத்தில் ரூ.6.51 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கொள்ளையடித்த பணத்தில் அவா்கள் வாங்கிய மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவா்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கிகளும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த இருவரும் ஆயுதங்கள் வாங்குவதற்காக புலந்த்ஷாகா் நோக்கிச் சென்றபோது போலீஸாரிடம் பிடிபட்டனா். அவா்கள் மீது தாத்ரி போலீஸ் நிலையத்தில் குண்டா் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ராஜேஷ் குமாா் சிங் தெரிவித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

