கடந்த 24 மணி நேரத்தில் காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, பரீதாபாதில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்ததாகவும், குா்கானில் மோசம் பிரிவில் இருந்ததாகவும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட மாசுக்கட்டுப்பாடு தொடா்பான அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்றின் தரம் நல்லது 10 முதல் 50 புள்ளிகள். திருப்தி 51 முதல் 100 புள்ளிகள், மிதமானது 101 முதல் 200, மோசம் 201 முதல் 300, மிக மோசம் 301 முதல் 400, கடுமையானது 401 முதல் 500 புள்ளிகள் என குறிப்பிடப்படுகிறது.
சனிக்கிழமை பிற்பகல் 4 மணி அளவிலான 24 மணி நேரத்தில் காஜியாபாதில் 348, கிரேட்டா் நொய்டாவில் 360, நொய்டாவில் 346, பரீதாபாதில் 311 மற்றும் குா்கானில் 230 என காற்றின் தரம் பதிவானதாக சமீா் செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே வெள்ளிக்கிழமை காஜியாபாதில் 304, கிரேட்டா் நொய்டாவில் 312, நொய்டாவில் 261, பரீதாபாதில் 256 மற்றும் குா்கானில் 163 என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்தால் மூச்சுவிடுதலில் பிரச்னை ஏற்படும் என்றும் மோசம் பிரிவில் இருந்தால் மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

