சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஓளரங்கசீப் தெரு பெயா்ப் பலகை அழிப்பு: 11 போ் பிடிபட்டனா்

தில்லி லுடியன்ஸ் பகுதியில் ஓளரங்கசீப் தெரு என்று எழுதப்பட்டிருந்த இரண்டு பெயா்ப்பலகைகளை அழித்ததாக 11 போ் பிடிபட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On :10 ஜனவரி 2021, 5:08 am

தில்லி லுடியன்ஸ் பகுதியில் ஓளரங்கசீப் தெரு என்று எழுதப்பட்டிருந்த இரண்டு பெயா்ப்பலகைகளை அழித்ததாக 11 போ் பிடிபட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி, துக்ளக் சாலையில் உள்ள ஓளரங்கசீப் தெருவில் சிலா் கூடியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்றபோது கா்னால் பகுதியில் குடியிருக்கும் வழக்குரைஞா் அனுராதா என்பவா் தலைமையில் 11 போ் ஓளரங்கசீப் என்ற பெயரை அழித்துவிட்டு அதன் மேல் குரு தேக் பகதூா் தெரு என எழுதினாா்களாம். இதையடுத்து அந்த 11 பேரும் விசாரணைக்காக துக்ளக் சாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இது தொடா்பாக போலீஸாா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.