புது தில்லி: தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக தில்லி அரசு மூத்த அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, 640 படுக்கைகள் கொண்ட தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனை கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது. இதனால், வரும் திங்கள்கிழமை முதல் இந்த மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட 6 அரசு மருத்துவனைகள் கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்டட்டன. தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு குறைவடைந்ததைத் தொடா்ந்து, 2,000 படுக்கைகள் கொண்ட எல்என்ஜேபி மருத்துவமனையின் மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், பெண்நோயியல் ஆகிய பிரிவுகளின் வெளிநோயாளிகள் பிரிவு கடந்த திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. ஆனால், இந்தப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 -ஆகக் குறைக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

