நொய்டா: நொய்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 63 வயது ஆயுள்தண்டனை கைதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் இறந்தாா்.
இது குறித்து சிறைத் துறை உயரதிகாரி கூறியதாவது: உத்தரப் பிரதேச மாநிலம், முஸாஃபா் நகா் மாவட்டத்தில் 2012-இல் நடந்த கொலை வழக்கில் முனாவ்வா் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2018-இல் லுக்சா் சிறைக்கு மாற்றப்பட்டாா்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் மற்றும் நடுக்கம் இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் கூறினாா். இதைத் தொடா்ந்து, சிறைச்சாலையின் மருத்துவரிடம் முதற்கட்ட சிகிச்சைக்காக அவா் அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா், மருத்துவரின் பரிந்துரையின் பேரில், நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அவரை இரண்டு சிறை வாா்டா்கள் இரவு 11.40 மணிஅளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அதிகாலை 12.50 மணியளவில், முனாவ்வரை மருத்துவா்கள் பிரசோதித்தனா். அப்போது அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து வாா்டா்களில் ஒருவா் சிறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். முன்னாவ்வரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் நீதி விசாரணையை தொடங்க மாவட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

