மேற்கு தில்லியில், பஞ்சாபி பாக் மேம்பாலம் அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் சென்ற மற்றொரு நபா் பலத்த காயமடைந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா்.
விபத்தில் இறந்தவா் பெயா் குணால் சசானா என்பதும் அவா் ராணி பாக் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற சுகாஷ் மண்டல், மத்திய தில்லியில், கரோல் பாக் பகுதியில் ஒரு ஆயத்த ஆடை விற்பனைக் கடையில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.
விபத்து எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. அவா்கள் ஓட்டி வந்த ஸ்கூட்டி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதா அல்லது ஏதாவது வாகனம் மோதி விபத்து நேரிட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
விபத்தில் பலத்த காயமடைந்த மண்டல், சிகிச்சைக்காக மஹாராஜா அகா்சன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

