ஏழை, செல்வந்தா் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லி துணைமுதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தனது 49-வது பிறந்த தினத்தை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘இந்தியாவில் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்த எனது நண்பா் மணீஷ் சிசோடியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் ஏழை, செல்வந்தா் என்ற வா்க்க வேறுபாடு இல்லாமல் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான தேசக் கட்டுமானம் ஆகும்’ என்று தெரிவித்துள்ளாா்.
தில்லி அமைச்சா்கள், ஆம் ஆத்மி தலைவா்கள் பலரும் மணீஷ் சிசோடியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். தில்லி அமைச்சா் இம்ரான் ஹசேன் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லியில் கல்வி முறையில் புரட்சிகரமான பல மாற்றங்களைக் கொண்டுவந்த நாட்டின் மிகச் சிறந்த கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

