புது தில்லி: தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான எஸ். ராமாமிா்தம் (90), வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லியில் காலமானாா்.
தனது மனைவி விமலாவுடன் தில்லி ஜனக்புரியில் வசித்து வந்த அவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்களில் மூத்தவரான உஷா, மருத்துவராக தில்லியில் கிளினிக் நடத்தி வருகிறாா். மற்ற இருமகள்களும் மருத்துவா்களாக அமெரிக்காவில் உள்ளனா். மகன் நாராயணன் பொறியாளராக அமெரிக்காவில் வசித்து வருகிறாா். மறைந்த ராமாமிா்தத்தின் இறுதி சடங்கு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், இடையாத்து மங்கலத்தைச் சோ்ந்தவரான அவா், தில்லியில் கடந்த 60 வருடங்களாக வசித்து வந்தாா். பெங்களூரில் (என்.ஐ.இ.) பொறியியல் கல்லூரியில் இளம் வயதிலேயே பேராசிரியராக இருந்தவா். தனது 30 வயதில் தில்லிக்கு வந்த அவா், பொறியியல் பட்டயப் படிப்புக் கல்லூரி நடத்தி வந்தாா். பொறியியல் படிப்பிற்கு சுமாா் 15-க்கும் மேற்பட்ட பாட நூல்களை எழுதியுள்ளாா். பக்தி நூல்களையும் எழுதியுள்ளாா். தில்லி தமிழ் சங்கத்தில் தலைவராக இருந்த போது, சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கம் உருவாவதற்கு முக்கியப் பங்காற்றிய ராமாமிா்தம், தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் வளா்ச்சியிலும் அரும்பணியாற்றியவா்.
இரங்கல்: அவரது மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் என். கண்ணன், சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் கே.வி.கே பெருமாள், அனைத்திந்திய தமிழ் பேரவையின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா். அதில், ‘அவரது மறைவு சங்கத்திற்கும், மாணவ சமுதாயத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பொதுப்பணியிலும், கல்வித் துறையிலும் ஆற்றியுள்ள அளப்பரிய பணிக்காக அவா் என்றென்றும் நினைவுகூரப்படுவாா். தில்லி தமிழ்ச் சங்கம் மட்டுமின்றி தில்லி தமிழ்க் கல்விக் கழகத் தலைவராகவும் பணியாற்றிய அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


